நிலா 
தேய்வதால் 
வானம் வருத்தப்படுவதில்லை... 

பூக்கள் 
உதிர்வதால் செடிகள் 
புலம்புவதுமில்லை... 

மழையில் நனைவதால் 
மரங்கள் குடை 
பிடிப்பதுவுமில்லை... 

மதங்கள் 
வேறுபடுவதால் மனிதம் 
மாறுவதுமில்லை... 

நம்பிக்கை தொடர்வதால் 
தோல்வி வெற்றியின் 
வேரறுப்பதுமில்லை.. 

உழைத்து வாழ்வதால் 
வாழ்வில் வறுமை 
வீசுவதுவுமில்லை..

1 கருத்து:

Unknown சொன்னது…

positive thought....carry on...