நான் மட்டுமே வந்து வந்து போன சில நினைவுகள்.....! 
மனம் விட்டு பேசிய சில வார்த்தைகள் வாய்விட்டு சிரித்த சில நேரங்கள் 
உதட்டளவு உறவினை உதறித் தள்ளிவிட்டு உள்ள்த்தளவில் உறவினை வளர்த்து உயிர் வாழ்வோமெனச் சொன்ன உன் நினைவுகளால்.....! 
மறக்க முடியாத உறவுகளைச் சுமந்து ஊனமாய் போன உடம்புடன் நான் மட்டும் நித்திரை இல்லாத நினைவுகளோடு..... இன்னும்
நிலா 
தேய்வதால் 
வானம் வருத்தப்படுவதில்லை... 

பூக்கள் 
உதிர்வதால் செடிகள் 
புலம்புவதுமில்லை... 

மழையில் நனைவதால் 
மரங்கள் குடை 
பிடிப்பதுவுமில்லை... 

மதங்கள் 
வேறுபடுவதால் மனிதம் 
மாறுவதுமில்லை... 

நம்பிக்கை தொடர்வதால் 
தோல்வி வெற்றியின் 
வேரறுப்பதுமில்லை.. 

உழைத்து வாழ்வதால் 
வாழ்வில் வறுமை 
வீசுவதுவுமில்லை..
இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி
மலையை விட்டு பிரியும் அருவி! 
கடலை விட்டு பிரியும் கரை! 
வானத்தை விட்டு பிரியும் மழை! 
உடலை விட்டு பிரியும் உயிர்! 
உன்னை விட்டு பிரியும் நான்! 
என்னை விட்டு பிரியும் நீ! 
நம் இருவரையும் விட்டு பிரிகிறது நம் உண்மையான காதல்
எங்கே என் தேவதை? உன்னை தேடி கலைத்து விட்டேன் 
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய் 
உறங்க நினைத்தாள் கனவாக என்னுடன் நிலைக்கிறாய் 
உன்னை பற்றி கவி எழுத நினைத்தாள் வார்த்தையாக விழுகிறாய் 
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய் 
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நி இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!
சூரியனை ஒப்பிட இவ்வுலகிள் வேரொன்று இல்லை
அதேபோல் அன்பேஉன்னை ஒப்பிட உன்னை வர்னிக்க உன்னவிட அழகா ஒன்றை இப்புவுலகில்நான் கானவில்லை..
சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ...... ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் 
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் .... காரணம்....நான் நேசிப்பவளும் நீ தான்.....என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்..