உன் நினைவால் உன்னை பார்க்க வந்தேன் என்பதற்காக,
பாதையை மாற்றினாய்!
உன்னுடன் தான் நான் இருக்கின்றேன், என்பதை மறந்து.
உன்னிடம் பேச வந்தேன் மறுத்துவிட்டாய்,
உன் நினைவுதான் என்னை பேச வைக்கிறது, என்பதை மறந்து.

தூண்டிலில் சிக்கிய மீனாய் சிக்கி தவிக்கிறேன்....
என் இதயத்தில் உன் பார்வை பட்ட நாள்முதல்.
மாயம் செய்யவில்லை... மயங்கிவிட்டேன்.... நீ பார்த்த ஒரேஒரு பார்வையில்.
கண்கள் உன்னை கண்டதும் கவலைகள் பறந்தன
கண்ணீர் மறைந்தன புன்னகை பூத்தது முழு நிலவுடன்-என்
வாழ்க்கை பயணம் தொடந்தது- ஒரு தலை காதலுடன்


தென்றலை நேசித்தேன் புயல் வரும் வரை...!பூக்களை நேசித்தேன் வாடும் வரை...!நிலவை நேசித்தேன் விடியும் வரை...!உன்னை நேசித்தேன் என் உயிர் போகும் வரை...!