காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா.....! என்று
இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்
உயிர் மூச்செடுத்து ஒரு கவிதை எழுதுவேன்
மகிழ்ச்சியாக மரணத்திலும், தமிழ் வாழ்கவென்று !
என் இறுதி ஊர்வலத்தில்
பூக்களை தூவாதிர்கள் முட்களை தூவுங்கள்
அப்பொழுதாவது என்னை
பின் தொடராமல் இருப்பாள்-அவள்
என் நிம்மதியை கெடுக்க
சிரிதுகொண்டிருப்பது என் இதழ்கள் மட்டும் தானடி உன்னையே நினைத்து அழுதுகொண்டிருக்கும் என் இதயத்தின் வலி தெரியாமலே போகட்டும் உனக்கு
உன்னை பார்க்காதபோது என் சிந்தனைகள்
சிதைந்து போகின்றது ... இதை நீ அறிவாயா .
காதலை சொல்ல உதடுகள் வேண்டும்
என நினைத்திருந்தேன். கண்ணீர்த்துளிகளை
கண்டபிறகு தெரிந்துகொண்டேன்....
காதலை சொல்ல கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று....